இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

திங்கள், டிசம்பர் 12, 2011

மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் வட்டியில்லா கடனுதவி திட்டம்!

அல்லாஹ்வின் பேரருளால் 2011 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக ஆரம்பிக்கப்பட்ட வட்டி இல்லா கடன் திட்டத்தில் இதுவரை 12 நபர்கள் ரூபாய் 34500 வரை பயன் அடைந்து உள்ளார்கள்.
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் எவ்வித அடமானமும் பெறாமல் ஒவ்வொரு நாளும் அவர்களாகவே வந்து பணம் செலுத்த வேண்டும் அல்லாஹ்வுக்கு அஞ்சி
உங்கள் கடனை நிறைவேற்றுங்கள் என்ற அல்லாஹ்வின் அச்சம் மட்டுமே விதைக்கப்பட்டது.
இன்றைய தேதி வரை பணம் செலுத்திகொண்டு வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
முதலீடு வெறும் ரூபாய் 500 ல் ஆரம்பித்து அல்லாஹ்வின் கருணையால் ரூபாய் 14500 ஆக உயர்ந்து இந்த சிறுதொகையை கொண்டு 12 நபர்களுக்கு 34500 பயனடைந்துள்ளனர். எல்லா புகழும இறைவனுக்கே