இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

சனி, ஜூன் 30, 2012

29/06/2012 மரக்கடை மேல்கொன்டாளி தமிழர் தெருவில் குர்ஆன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வோம் என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 29/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தமிழர் தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் குர்ஆன்னுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வோம் என்ற தலைப்பில் இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். இதுபோன்ற தாவா பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.



29/06/2012 ஒன்ரே குளம் ஒருவனே தேவன் தஃவா நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 29-06-2012  அன்று ஒன்ரே குளம் ஒருவனே தேவன் என்ற தஃவா நோட்டிஸ் ஜும்ஆவிற்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மரக்கடை லெட்சுமாங்குடி  பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.


13/06/2012 தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இருமாத செயல்திட்டம் நோட்டிஸ் விநியோகம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 13/06/2012 அன்று தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இருமாத செயல்திட்டம் என்ற தஃவா நோட்டிஸ் மரக்கடை லெட்சுமாங்குடி  பகுதிகளிள் விநியோகம் செய்யப்பட்டது.



27/06/2012 மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் இஸ்லாத்தின் பெயரால் நடைப்பெரும் பித்அத் தெருமுனை பிரச்சாரம்


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையில் 27/06/2012 அன்று மரக்கடை மேல்கொன்டாளி தெருவில் மஹ்ஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடைப்பெரும் பித்அத் என்ற தலைப்பில் இமாம் அப்துல் காதர் அவர்கள் உறை நிகழ்த்தி மக்களுக்கு தாவா செய்தார். இதுபோன்ற தாவா பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.


வியாழன், ஜூன் 21, 2012

17 / 06 / 2012 தொளுகையின் முக்கியத்துவம் குறித்தும் தாவா செய்து நபி வழி தொழுகை முறை புத்தகமம் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலின் முன்னால் இமாம் பதுர் ஜமான் அவர்கள் 17/06/2012 அன்று பொதக்குடி ஜலால் தெருவில் தெரு முனையில் அமர்ந்து வீனாக நேரத்தை கழித்து கொண்டிருந்த சகோதரர்களிடம் தொளுகையின் முக்கியத்துவம் குறித்தும் தாவா செய்து தொழுகை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார். அவர்களுக்கு  தொழுகை குறித்த நபி வழி தொழுகை முறை புத்தகமும் வழங்கப்பட்டது. இதுபோன்ற தாவா பணிகள் மென்மேலும் தொடர அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள்.



திங்கள், ஜூன் 18, 2012

17/6/2012 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டத்திற்காக மாலை 6 மணி முதல் 10.00 மணி வரை மலையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக வாலி வசூல்


முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின கொடுக்காமல் இருட்டடிப்பு செய்த தமிழக அரசை கண்டித்து அன்று (18-6-2012) காலை 11 மணியளவில்  திருவாருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை திருவாரூர் மாவட்டம்  தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது. இதற்காக 17/6/2012 மாலை 6 மணி முதல் 10.00 மணி வரை மலையும் பொருட்படுத்தாமல் மரக்கடை பகுதியில் வீடு வீடாக வாலி வசூல் செய்யபட்டது. அத்துடன் இம் முற்றுகைக்காக மக்களுக்கு அலைப்பு கொடுக்கபட்டு நோட்டிஸ் வினியொகம் செய்யபட்டது.