இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

ஞாயிறு, ஜனவரி 27, 2013

6.1.2013 மரக்கடையில் மாணவர்கள் மற்றும் கிளை நிருவாகிகளுக்கு நிருவாக ஒழுங்கு குறித்து நல்ஒழுக்க தர்பியா முகாம் நடைப்பெற்றது.


திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்  சார்பாக   கடந்த 06.01.2013 அன்று காலை10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்கள், மற்றும் கிளை நிருவாகிகளுக்கு நல்ஒழுக்க தர்பியா  முகாம் நடைப்பெற்றது. இத் தர்பியாவை கிளை தலைவர் பாதுஷா மெய்தீன் அவர்கள் துவங்கி வைத்தார். இம் முகாமில் மாணவர்களுக்கு தொழுகை குறித்தும் கிளை நிருவாகிகளுக்கு நிருவாக ஒழுங்கு  குறித்தும் மாவட்ட தாயி அப்துல் ஹமித் மஹ்ளரி அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும் 34 நபர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்